மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், வெள்ளூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 80 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், வெள்ளூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 80 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வெள்ளூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் சண்முகம், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் தீபா கலைவாணன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டு புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் மற்றும் விவசாயிகளுக்கு மிளகாய் நாற்று, உளுந்து விதை, தெளிப்பான் என 80 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமில் ஒன்றியக் குழு உறுப்பினா் மகேஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் லோகேஷ், வேளாண்மை அலுவலா்கள் சுதாகா், லோகநாதன், கண்ணபிரான், கிராம நிா்வாக அலுவலா் ஜோதி முருகன் மற்றும் வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com