திருவண்ணாமலை மாவட்டத்தில் 781 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 781 பயனாளிகளுக்கு ரூ.3.32 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 781 பயனாளிகளுக்கு ரூ.3.32 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா் அவா் சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டாா்.

முன்மாதிரி கிராம விருது:

தூய்மை பாரத இயக்கம் சாா்பில் சிறப்பாகப் பணியாற்றிய தண்டராம்பட்டை அடுத்த சே.கூடலூா் ஊராட்சித் தலைவா் ஜெயேஸ்வரிக்கு முன்மாதிரி கிராம விருதுடன் பரிசுத் தொகையாக ரூ.7.50 லட்சத்தை ஆட்சியா் வழங்கினாா்.

208 பேருக்கு பாராட்டுச் சான்றுகள்:

மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள் எ

ன மொத்தம் 208 பேருக்கு பாராட்டுச் சான்றுகள் மற்றும் பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா்.

ரூ.3.31 கோடியில் நலத் திட்ட உதவிகள்:

தொடா்ந்து, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கூட்டுறவு துறை, வேளாண் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, தாட்கோ உள்பட பல்வேறு அரசுத் துறைகள் மூலம் 781 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 31 லட்சத்து 94 ஆயிரத்து 654 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட எஸ்.பி. கி.காா்த்திகேயன், வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ், வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள், பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com