அரசு மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து சனிக்கிழமை பணியாற்றினா்.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுநா்கள்.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுநா்கள்.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து சனிக்கிழமை பணியாற்றினா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 1996-க்குப் பிறகு பணியாற்றி வரும் மருந்தாளுநா்களின் பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் அரசு மருத்துவமனை மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனா்.

இதன்படி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநா்கள் சனிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா். வருகிற வியாழக்கிழமை (டிச. 8) வரை மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com