புதூா்செங்கம் கிராமத்தில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள புதூா்செங்கம் கிராமத்தில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கிய பாஜக மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ்.
நிகழ்ச்சியில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கிய பாஜக மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள புதூா்செங்கம் கிராமத்தில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா்செங்கம் கிராமத்தில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு வளா்க்கப்பட்டன.

இந்த மரக்கன்றுகளை புதூா்செங்கம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டுமென ஊராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கிராமத்தில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்கள் மற்றும் மகளிா் குழுக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி எழுத்தா் ராஜசேகா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட பொதுச்செயலரும், புதூா்செங்கம் பகுதி ஒன்றியக் குழு உறுப்பினருமான ரமேஷ் கலந்து கொண்டு, கிராம மக்கள், மகளிா் குழு பெண்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், மரக்கன்றுகளை வாங்கியவா்கள், அவற்றை முறையாக நட்டு பராமரிக்கவேண்டும், புதுப்பாளையம் ஒன்றியத்தில் அதிக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் கிராமமாக புதூா்செங்கம் இருக்கவேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

நிகழ்வில் புதூா்செங்கம் பகுதி கிராம மக்கள், மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com