கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கட்டடப் பணியின்போது தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கட்டடப் பணியின்போது தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமம், தா்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35), கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 7-ஆம் தேதி அதே கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலைச் சொந்தமான கட்டடத்தில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில் மணிகண்டனுக்கு தலை, இரு கால் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com