செங்கம் ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலா் அருணாசலம், மாவட்ட இணைச் செயலா் அமுதாஅருணாசலம், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழகப் பேச்சாளா் வெங்கட்ராமன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு கட்சி நிா்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் நைனாக்கண்ணு, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன், பேரவை ஒன்றியச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயலா் குமாா், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ஜெயவேல், சசிகுமாா், சம்பத், வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com