வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளையின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கிளைத் தலைவா் ம.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். செயலா் வி.எல்.ராஜன் வரவேற்றாா்.
எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன் புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
வட்டாட்சியா் வி.முருகானந்தம், ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா், அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் வி.எஸ்.தளபதி, செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் இரா.சரவணன், நகராட்சி தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் பழனி ஆகியோா் புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா்.
விழாவில் புதிய தலைவராக இ.சாதிக்பாஷா, செயலராக கு.சதானந்தன் உள்ளிட்டோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். விழாவையொட்டி, வந்தவாசி நகராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.