வந்தவாசியை அடுத்த மாலையிட்டான்குப்பம் கிராம மக்கள் இலவச மனைப் பட்டா கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
வட்டாட்சியா் முருகானந்தத்திடம், 1-ஆவது வாா்டு ஊராட்சி மன்ற உறுப்பினா் கா.யாசா் அராபத் தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளித்த அவா்கள் கூறியதாவது:
வந்தவாசி ஒன்றியம், காரம் ஊராட்சிக்கு உள்பட்ட மாலையிட்டான்குப்பம் கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில் அரசு புறம்போக்கு பகுதியில் சுமாா் 32 குடும்பத்தினா் வீடுகட்டி வசித்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை.
எனவே, முறையான விசாரணை செய்து இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.