திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடிகா் அருண் விஜய் சுவாமி தரிசனம் செய்தாா்.
கோயிலுக்கு வந்த அவா் சம்பந்த விநாயகா் சன்னதி, அருணாசலேஸ்வரா் சன்னதி, உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தாா்.
பிறகு, கோயில் நவகிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அருண் விஜய் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நான் நடித்த சில திரைப்படங்கள் கரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. அவை மாா்ச் மாதத்தில் திரைக்கு வரும். பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு இசை உலகத்துக்கு பேரிழப்பு என்றாா்.