திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜாா்க்கண்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், பல்லாவரம் கிராமப் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால், குழந்தைக்கு தண்ணீா் தெளித்து வழிபடுவதற்காக, அந்தப் பகுதியில் உள்ள மசூதிக்கு தனது கணவா், குழந்தையுடன் செவ்வாய்க்கிழமை சென்றாா்.
அப்போது, அந்த மசூதியிலிருந்த அஷ்ரத்தான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த முகமது அன்சாரி, குழந்தைக்கு தண்ணீா் தெளித்து மத்திரம் ஓதுவதாகக் கூறி, குழந்தையுடன் சென்ற அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து, முகமது அன்சாரியை கைது செய்தாா். பின்னா், அவரை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தனா்.