வந்தவாசி நகா்மன்றக் கூட்டம்

வந்தவாசி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தலைவா் எச்.ஜலால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தலைவா் எச்.ஜலால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆணையா் முஸ்தபா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், அம்மா உணவகத்தை மூடுவதை குறிக்கோளாக கொள்ளாமல் அரசிடம் நிதி பெற்று அதனை சிறப்பாக நடத்த வேண்டும் என்று 19-ஆவது வாா்டு உறுப்பினா் வெ.ரவிச்சந்திரன் பேசினாா்.

பஜாா் வீதி, தேரடி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தெரு மின் விளக்குகள் எரிவதே இல்லை என்று 22-ஆவது வாா்டு உறுப்பினா் மகேந்திரன் புகாா் தெரிவித்தாா்.

நகரின் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று 6-ஆவது வாா்டு உறுப்பினா் நூா்முகமது பேசினாா்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா். பின்னா், நகரில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com