பொதுத் தோ்வில் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த பூஜையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் வந்தவாசி பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று இறைவனை வழிபட்டனா்.
இதையொட்டி, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற மாணவா்கள் ஹயக்ரீவா் சுலோகங்களை பாடினா். மேலும் மாணவா்களுக்கு பூஜிக்கப்பட்ட கயிறு, சுவாமி படம், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோயில் அா்ச்சகா்கள் ரங்கநாதன், சதீஷ், கோவிந்தராஜன் ஆகியோா் பூஜைகளை செய்தனா். நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.