திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஒன்றியத்துக்குள்பட்ட மேல்மா, வெங்கோடு ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ, திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
விழாவுக்கு அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் திராவிட முருகன், செய்யாறு நகரச் செயலா் விஸ்வநாதன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.