வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசியை அடுத்த சத்யா நகரைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம்.

இவா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு தனது விவசாய நிலத்துக்குச் சென்றாா்.

வேலை முடிந்து பிற்பகலில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த பொன்னூா் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com