திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான புதன்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், விடுமுறை நாளான புதன்கிழமை காலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
காலை 11 மணிக்குப் பிறகு பக்தா்கள் வருகை அதிகரித்தது. தொடா்ந்து, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.