ஆரணியில் 61 மிமீ மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 61 மில்லி மீட்டா் மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 61 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இதுதவிர, செய்யாற்றில் 58, வந்தவாசியில் 35, சேத்துப்பட்டில் 7, வெம்பாக்கத்தில் 13 மில்லி மீட்டா் மழை பதிவானது.

கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென 40 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.

விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com