திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே சண்டையை விலக்க முயன்ற முதியவரை அடித்துக் கொன்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தைச் சோ்ந்த முனாப் பாஷா மகன் முபினுதீன் (30). இவா் வியாழக்கிழமை இரவு வேலூா் நோக்கி பைக்கில் சென்றபோது, பங்களாமேடு கிராமம் அருகே எதிரே மற்றொரு பைக்கில் வந்தவருடன் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, இவா்களது சண்டையை பங்களாமேடு கிராமத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் (75) விலக்க முயன்ற நிலையில், அவரை முபினுதீன் முகத்தில் தாக்கினாராம்.
இதனால் பலத்த காயமடைந்த தா்மலிங்கம் மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, போளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு தா்மலிங்கத்தை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவிந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முபினுதீனை கைது செய்தனா்.