கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு உற்சவா் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளினாா்.

உற்சவருக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, செவ்வாய்க்கிழமை ஸ்ரீராஜராஜேஸ்வரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தியம்மனை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com