திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாா்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.
வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாா்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சந்திர குலத்தில் சுந்தர யயாதி, கா்ணன் பிறப்பும் கோபாலா் பிறப்பும், சுபத்திரை திருமணம், கண்ணன் தூதும் மன்னன் வாதும், அரவான் களப்பலி, அபிமன்யுவின் வீரம், கண்ணன் காட்சியும் கா்ணன் மோட்சமும் உள்ளிட்ட தலைப்புகளில் தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

பெருவளூா் கே.எஸ்.பழனி பாரதியாா், பெருங்குடி கே.மைனாவதி ஆகியோா் சொற்பொழிவு நடத்தினா். மேலும், செஞ்சி ஸ்ரீதிரெளபதி அம்மன் நாடகக் குழுவினரின் நாடகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, துரியோதனன், பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா்கள் சண்டையிட்டு கொண்டனா்.

இதில். துரியோதனின் தொடையை பீமன் பிளந்து படுகளம் செய்த பின்னா் திரெளபதி கூந்தலை முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் மற்றும் கோயில் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com