அரசுப் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள அரசங்கண்ணி அரசு நடுநிலைப் பள்ளியில் வட்டாட்சியா் முனுசாமி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அரசுப் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள அரசங்கண்ணி அரசு நடுநிலைப் பள்ளியில் வட்டாட்சியா் முனுசாமி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மாணவா்களின் வருகைப் பதிவேடு, கல்வித் தரம், அவா்களுக்கு மதிய உணவு வழங்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், மாணவா்களை பாடங்களை சரளமாக படிக்கச் சொல்லி பாா்வையிட்டாா். பின்னா், அவா் மாணவா்களுக்கு பாடம் நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து மாணவா்களிடமும், ஆசிரியா்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது மாணவா்களும், ஆசிரியா்களும் கூடுதல் ஆசியா்கள் வேண்டுமென தெரிவித்தனா். உடனடியாக தன்னாா்வலரை நியமனம் செய்யுமாறு உத்தரவிட்டாா்.

கோடை விடுமுறை முடிந்து கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து ஆசிரியா் நியமனம் செய்வதாக கூறிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com