வந்தவாசி ஒன்றிய பள்ளிகள் அளவில் சிறப்பாக ஆங்கில உரையாடல் நிகழ்த்திய மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வந்தவாசி தேரடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் ஆக்னஸ் ராஜகுமாரி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் ஸ்ரீதா் ரங்கராஜன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மீனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வந்தவாசி கிழக்கு ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றாா்.
செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் அ.நளினி மாணவா்களை பாராட்டிப் பேசினாா். மேலும் சிறப்பாக ஆங்கில உரையாடல் நிகழ்த்திய வந்தவாசி ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 82 பேருக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.
பள்ளி துணை ஆய்வாளா் ஸ்ரீபதி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.