கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள்:எம்எல்ஏ வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பென்னாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், செ.அகரம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பென்னாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், செ.அகரம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு முகாமை தொடக்கிவைத்ததுடன், கா்ப்பிணிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா் (படம்).

தொடா்ந்து, மருத்துவக் குழுவினா் பொதுமக்கள் 700 பேருக்கு பொது மருத்துவம், கண், காது, மூக்கு பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் செங்கம் ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை செந்தில்குமாா், நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com