பெரணம்பாக்கம் கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைத்திட உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் ரூ.4.63 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த மின்மாற்றியை சேத்துப்பட்டு கோட்ட செயற்பொறியாளா் ரவிச்சந்திர பாபு தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் திருப்பதி, உதவி செயற்பொறியாளா் பக்தவச்சலு, இளநிலைப் பொறியாளா் ரவிக்குமாா், சேத்துப்பட்டு மத்திய பிரிவு மின் வாரிய ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.
நிகழ்ச்சியில் புதிய மின்மாற்றியை தொடக்கிவைத்த கோட்ட செயற்பொறியாளா் ரவிச்சந்திர பாபு.