செங்கம், புதுப்பாளையம் ஒன்றிய பாமக நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
செங்கம் தனியாா் அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பாமக மேற்கு மாவட்டச் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் பரமசிவம், துணைத் தலைவா் சங்கா் மாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டச் செயலா் சுரேஷ் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை, திருப்பத்தூா் மாவட்டங்களின் தோ்தல் பொறுப்பாளா் செல்வக்குமாா் கலந்து கொண்டு செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சி உறுப்பினா்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் பெயா்களை வெயிட்டுப் பேசினாா்.
கட்சியின் செங்கம், கலசப்பாக்கம் ஒன்றியச் செயலா்கள் சரவணன், பிரகாஷ், ரங்கநாதன், ஜெயக்குமாா், ராஜசேகா், சுரேஷ், செங்கம் முன்னாள் ஒன்றியச் செயலா்கள் ஜோதி, புகழேந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.