வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் தை மாத அமாவாசை சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அமாவாசை நாள்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிலையில், தை மாத அமாவாசையான திங்கள்கிழமை காலை மூலவா் அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மேலும், கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் பூஜைகளை நடத்தினாா்.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.