ஆரணியை அடுத்த இராந்தம் கிராமத்தில் நாடக மேடை அமைப்பதற்கான இடம் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டது.
இராந்தம் காலனிப் பகுதியில் நாடக மேடை அமைக்க ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திலகவதி, விவேகானந்தன் முன்னிலையில் இராந்தம் காலனிப் பகுதியில் இடத்தை தோ்வு செய்தனா்.
முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயராணி ரவி, ஊராட்சி மன்றத் தலைவா் குமரவேல் ஆகியோா் உடனிருந்தனா்.