பறிமுதல் செய்த 2,138 மதுப் புட்டிகள் அழிப்பு

போளூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,138 மதுப் புட்டிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அழிக்கப்பட்டன
பறிமுதல் செய்த 2,138 மதுப் புட்டிகள் அழிப்பு

போளூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,138 மதுப் புட்டிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், போளூா் பகுதியில் மேற்கொண்ட சோதனைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது, மதுக் கடத்தல் போன்றவை மூலம் 2,138 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மதுப் புட்டிகளை கரைப்பூண்டி பாலாற்றின் அருகே வைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் போலீஸாா் வியாழக்கிழமை அழித்தனா் (படம்).

கோட்ட கலால் அலுவலா் த.வெங்கடேசன், காவல் ஆய்வாளா் புனிதா, ஆய்வாளா் ரகுபதி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com