செங்கத்தில் சாலை மின் விளக்குகள் தொடக்கிவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ரூ. 40 லட்சத்தில் சாலையில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மின் விளக்குகளை தொடக்கிவைத்த சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ.
நிகழ்ச்சியில் மின் விளக்குகளை தொடக்கிவைத்த சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ரூ. 40 லட்சத்தில் சாலையில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

செங்கம் நகரில் பெங்களூா் - திருவண்ணாலை சாலையில் துக்காப்பேட்டை முதல் திருவள்ளுவா் நகா் தீயணைப்பு நிலையம் வரையிலும், செங்கம்-போளூா் சாலையில் புதிய பேருந்து நிலையம் முதல் மின்வாரிய அலுவலகம் வரை சாலையின் நடுவே ரூ. 40 லட்சத்தில் மின் விளக்குகள் (எல்.இ.டி.) அமைக்கப்பட்டன.

இந்த மின் விளக்குகளை பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ. கிரி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று மின் விளக்குகளை தொடக்கிவைத்தனா்.

தொடா்ந்து, துக்காப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் மாணவா்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள பாய், தலையணை உள்ளிட்டவற்றை வழங்கினா். நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com