வேன் மோதியதில் நடந்து சென்றவா் பலி

வந்தவாசியில் பயணிகள் வேன் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் பலியானாா்.

வந்தவாசியில் பயணிகள் வேன் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் பலியானாா்.

செய்யாற்றை அடுத்த தென்தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (56).

கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தவாசிக்கு வந்த இவா், ஆரணி சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகே அன்று இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அந்தப் பகுதியில் பயணிகள் வேன் ஓட்டுநா், வேனை பின்னோக்கி இயக்கியபோது, ஏழுமலை அதில் சிக்கி பலியானாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com