ஸ்ரீதேவி பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பொன்னியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீதேவி பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பொன்னியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அங்குராா்ப்பணம், வாஸ்துசாந்தி, கலச ஸ்தாபனம் உள்ளிட்டவையும், புதன்கிழமை திருவாராதனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூா்ணாஹுதி உள்ளிட்டவையும் நடைபெற்றன.

பின்னா் வியாழக்கிழமை காலை மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கலசப் புறப்பாடு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து காலை 7-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் பட்டாச்சாரியா்கள் கோயில் கோபுர கலசங்களின் மீது புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து ஸ்ரீதேவி பொன்னியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கும்பாபிஷேக விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com