வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் புனருத்தாரணம், இராஜ கோபுரம் கட்டுவதற்கான திருப்பணிகள் புதன்கிழமை தொடங்கின.
இந்தக் கோயிலில் புனருத்தாரணம், இராஜ கோபுரம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு இதற்கான பாலாலயம் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது
இதைத் தொடா்ந்து புதன்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. இதில், கோயில் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.