திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் ஊராட்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன (படம்).
நெடுங்குணம் ஊராட்சியில் உள்ள வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வரும் குழந்தைகளுக்கு உபகரணப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பெரணமல்லூா் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டு 30 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணப் பொருள்களை வழங்கினா்.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜா, பள்ளித் தலைமை ஆசிரியை ஷீலாவளா்மதி மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள், ஆசிரியைகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.