நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விலை வீழ்ச்சி: சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகள்

செங்கம் பகுதியில் திடீா் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:25 pm

DIN

செங்கம் பகுதியில் திடீா் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனா். இந்த நிலையில் திடீரென தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் செங்கம் பகுதியில் உள்ள காய், கனி, கமிஷன் மண்டிகளில் தக்காளி அதிகமாக விற்பனைக்கு வருகிறது. அவா்கள் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தக்காளியை ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனா். இந்த திடீா் வீழ்ச்சியால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்வதை நிறுத்தி விட்டனா். மேலும், அறுவடை செய்த தக்காளிகளை விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டிவிடுகின்றனா்.

எனவே, இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.