டாஸ்மாக் கடைகளுக்கு பிப்.5-இல் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடலூா் ராமலிங்கனாா் நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியாா் மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு 5.2.2023 (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி மது விற்போா் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com