திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாரத்தில் உள்ள உழவா் உற்பத்தி நிறுவனத்தில் சென்னை வேளாண்மை இயக்குநா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
ஆராத்திவேலூா் கிராமத்தில் அமைந்துள்ள செய்யாறு உழவா் உற்பத்தி நிறுவனம் மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகளின் நடவடிக்கை குறித்து வேளாண்மை இயக்குநா் ஏ. அண்ணாதுரை ஆய்வு செய்தாா்.
அப்போது, மணிலா தரம் பிரித்தல், எண்ணெய் உற்பத்தி, நெல் விதைகள் உற்பத்தி, விற்பனை விதை சுத்திகரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா்.
மேலும், பங்குத்தொகை ஈவு, பங்குதாரா்களுக்கு கிடைக்கிா எனவும், வணிக விரிவாக்கத்துக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது விதைச் சான்று உதவி இயக்குநா் குணசேகரன், துணை இயக்குநா் கண்ணகி, உதவி இயக்குநா் சரவணன், செய்யாறு உதவி இயக்குநா் சண்முகம், அலுவலா்கள் சுமித்ரா, புகழேந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.