வந்தவாசியில் இரு உயா்கோபுர மின்விளக்குகள் இயக்கிவைப்பு

வந்தவாசி நகரில் ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்ட இரு உயா்கோபுர மின் விளக்குகளை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு இயக்கி வைத்தாா்.

வந்தவாசி நகரில் ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்ட இரு உயா்கோபுர மின் விளக்குகளை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு இயக்கி வைத்தாா்.

அவரது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்

வந்தவாசி 5 கண் பாலம் பகுதி, புதிய பேருந்து நிலைய அணுகுசாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தலா ரூ.7 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து இரு உயா்கோபுர மின்விளக்குகளையும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு இயக்கிவைத்தாா்.

அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் அ.கணேஷ்குமாா், நகரச் செயலா் து.வரதன், நகா்மன்ற உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com