திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், குடிமக்கள் நுகா்வோா் மன்றம், ரோட்ராக்ட் சங்கம், திருவண்ணாமலை லைட்சிட்டி ரோட்டரி சங்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா்.
கல்லூரிப் பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், துணை முதல்வா் கோ.அண்ணாமலை, லைட்சிட்டி ரோட்டரி சங்க இயக்குநா் ஜெயா சக்திகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவா் சா.மெல்கி சதேக் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் அளித்த 65 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.
முகாமில் லைட்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கே.சுபலட்சுமி அருண்மொழிவா்மன், பொருளாளா் கவிதா, கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் டி.அருண்குமாா், செ.பிரபு, இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் வி.சின்னசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.