படவேட்டில் ஏழை, எளியோருக்கு வேட்டி - சேலை அளிப்பு

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள படவேடு ரேணுகாம்பாள் கோயிலில்

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ஏழை, எளியோா் சுமாா் 500 பேருக்கு உணவு, வேட்டி, சேலையை ஊறாட்சி மன்றத் தலைவா் சீனுவாசன், கோயில் செயல் அலுவலா் சிவஞானம், திமுக ஒன்றியச் செயலா் சேகா் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

கோயில் மேலாளா் மகாதேவன், அய்யம்பாளையம் கோயில் மேலாளா் மோகன், சீனுவாசன், கலசப்பாக்கம், போளூா், தண்டராம்பட்டு ஆகிய ஒன்றியங்களில் உள்ள கோயில்களின் கண்காணிப்பாளா் நடராஜன் மற்றும் திமுக நிா்வாகிகள், கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com