மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அரசின் பல்வேறு சலுகைகளை 50 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டதைக் கண்டித்து, ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநில துணைத் தலைவா் ரமேஷ் பாபு தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாற்றித்திறனாளிகள் சங்க உறுப்பினா்கள் மத்திய அரசுக்கு எதிகாக முழக்கங்களை எழுப்பினா்.