திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற தைப்பூச தீா்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
அருணாசலேஸ்வரா் கோயில் சாா்பில் ஆண்டுதோறும் தைப்பூச தீா்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் இருந்து உற்சவா் அருணாசலேஸ்வரா் மேள-தாளங்களுடன் புறப்பட்டாா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற உற்சவா், ஈசான்ய குளத்தை வந்தடைந்தாா். பிறகு, ஈசான்ய குளக்கரையில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பின்னா், குளத்தில் சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை நீரில் மூழ்கி எடுத்து தீா்த்தவாரி நிகழ்ச்சியை சிவாச்சாரியா்கள் நடத்தினா்.
இந்த நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதன் பிறகு, உற்சவா் அருணாசலேஸ்வரா் மேள தாளங்கள் இல்லாமல் கோயிலுக்கு திரும்பினாா்.