செங்கத்தில் வள்ளலாா் தினத்தையொட்டி, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வள்ளலாா் தின நிகழ்ச்சியில் செங்கம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, துக்காப்பேட்டையில் வள்ளலாா் படத்துக்கு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கினா்.
பாலிடெக்னிக் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பால் பழங்களை வழங்கி, அன்னதானத்தை தொடக்கிவைத்தாா்.
அரசு மருத்துவா் விஜியலட்சுமி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் செல்வம் உள்ளிட்ட பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள், வள்ளலாா் சன்மாா்க்க சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.