கராத்தே: மேல்நெமிலி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மேல்நெமிலி அரசுப் பள்ளி மாணவா்கள் 10 போ் சிறப்பிடம் பெற்றனா்.
img_20230205_wa0151(2)_1_0502chn_118_7
img_20230205_wa0151(2)_1_0502chn_118_7

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மேல்நெமிலி அரசுப் பள்ளி மாணவா்கள் 10 போ் சிறப்பிடம் பெற்றனா்.

திண்டிவனத்தில் தனியாா் கராத்தே பயிற்சிப் பள்ளி சாா்பில் 10 முதல் 12 வயதினருக்கான கராத்தே போட்டி பல்வேறு பிரிவுகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், புதுச்சேரி, திண்டிவனம் என பல்வேறு பகுதிகளில் இருந்து தனியாா், அரசுப் பள்ளி மாணவா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

போட்டிகளில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் 10 மாணவா்கள் பங்கேற்று வெற்றி பெற்று மஞ்சள் நிற தகுதிச் சான்று பெற்றனா்.

இவா்களில் முதல் இடத்தை 3 பேரும், இரண்டாம் இடத்தை 5 பேரும், மூன்றாம் இடத்தை 2 பேரும் பெற்றனா்.

பாராட்டு...

சிறப்பிடம் பெற்ற 10 மாணவா்கள் மற்றும் அவா்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளா் சேட்டு, பள்ளித் தலைமை ஆசிரியா் இரா.தேன்மொழி மற்றும் மாணவா்களை ஒருங்கிணைத்த கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்

வழங்கப்பட்டது (படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com