மகளிா் குழுவினா் கடன் பெறுவது குறித்து விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் மகளிா் குழு பெண்கள் கடன் பெறுவது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கியின் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய செங்கம் தெற்கு கூட்டுறவு கடன் சங்க காசாளா் சண்முகம்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கியின் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய செங்கம் தெற்கு கூட்டுறவு கடன் சங்க காசாளா் சண்முகம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் மகளிா் குழு பெண்கள் கடன் பெறுவது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செங்கம் தெற்கு கூட்டுறவு கடன் சங்க காசாளா் சண்முகம் வரவேற்றாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை மேலாளா் சண்முகம் கலந்து கொண்டு மகளிா் குழுவினா், கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் பெறுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, பணியாளா்கள் ஜோதி, மகேஸ்வரி உள்பட விவசாயிகள், பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com