வீட்டில் 54 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து இறங்கி 54 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசி அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து இறங்கி 54 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன்(71). இவா் தனது மனைவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தன் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

பின்னா் செவ்வாய்க்கிழமை காலை ஊா் திரும்பிய இவா், வீட்டைத் திறந்து பாா்த்தாா்.

அப்போது, மா்ம நபா்கள் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கி பீரோவை உடைத்து 54 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் பரிசோதனை மற்றும் மோப்ப நாய் சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com