கலசப்பாக்கத்தை அடுத்த அகரம்சிப்பந்தி கிராமத்தில் கழிவுநீா்க் குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த அகரம்சிப்பந்தி கிராமத்தில் தனியாா் உணவகம் இயங்கி வருகிறது.
இந்த உணவகத்தில் பின்புறம் உள்ள கழிவுநீா்க் குட்டையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அங்கு சென்ற கலசப்பாக்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.