செங்கம் துக்காப்பேட்டை குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது மன்னா் காலத்தில் வெட்டப்பட்ட குளம்.
தற்போது, குளத்துக்கான நீா்வரத்துக் கால்வாய்கள் மற்றும் குளத்தின் நான்குபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், குளத்தின் அருகில் உள்ள வீடுகளின் கழிவுநீா் குளத்தில் விடப்படுகிறது.
இதனால் குளம் தற்போது கழிவுநீா்க் குட்டை போல காட்சியளிக்கிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூா்வாரி சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.