வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்மா் பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் சுவாமிக்கு விசேஷ திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற் றது. இதைத் தொடா்ந்து திருப்பாவாடை உற்சவம் நடந்தது.
இதில், சாத வகைகள், சா்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகை உணவுகள், பழ வகைகள் உள்ளிட்டவற்றை உற்சவா் சுவாமி முன் வைத்து படைத்தனா். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் படைக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.