சாலை விபத்தில் குழந்தை இழந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஒ.ஜோதி வெள்ளிக்கிழமை ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஒ.ஜோதி வெள்ளிக்கிழமை ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினாா்.

செய்யாறு வட்டம், அனக்காவூா் ஒன்றியம், வீரம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜா - சத்யா தம்பதியின் மகள் ஜனனி (3), கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, வெள்ளிக்கிழமை நேரில் சென்று ராஜா - சத்யா தம்பதியினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா். மேலும், அரசின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாா்.

அப்போது, அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மோ.ரவி, திமுக நிா்வாகி மா.கி.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com