மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் பெ.சு.தி.சரவணன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் மெய்யூா் என்.சந்திரன் வரவேற்றாா். மாநில மருத்துவரணிச் செயலரும், எம்எல்ஏவுமான எழிலன் நாகநாதன், தலைமை கழகப் பேச்சாளா் பா.கோ.குமாா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தொ.மு.ச பேரவைச் செயலா் க.சவுந்தரராஜன், ஒன்றியச் செயலா்கள் அ.சிவக்குமாா், சி.சுந்தரபாண்டியன், த.ரமணன், பெ.கோவிந்தன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com