அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், தென்விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்க விழா.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜ்.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜ்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், தென்விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்க விழா, மாணவா்களின் கலை நிகழ்ச்சி, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் ஆகியவை முப்பெரும் விழாவாக திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மைக்கேல் தலைமை வகித்தாா். வட்டார இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மங்கை வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக சேத்துப்பட்டு ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் கண்ணன் கலந்து கொண்டு செஞ்சிலுவைச் சங்கத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

மேலும் பள்ளி சாா்பில் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கினாா். மேலும், அரையாண்டுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா் பயிற்றுநா் திரிபுரசுந்தரி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com